டெங்கு விழிப்புணர்வு முகாம்

ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் காரப்பட்டு அரசு

ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் காரப்பட்டு அரசு மருத்துவமனை சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில் அரசு மருத்துவர் சாமுவேல் மற்றும் சுகாதார ஆய்வாளர் துரை ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு பற்றிய  பல்வேறு கருத்துகளைக் கூறினர். இதில் கல்லூரி மாணவ- மாணவியர் மற்றும் பணியாளர்கள் உள்பட சுமார் 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் செல்வராஜ் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com