ஒசூரில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் மூக்கண்டப்பள்ளி முன்னாள் ஊராட்சித் தலைவர் வெங்கட் ரெட்டி உயிரிழந்தார்.
ஒசூர் மூக்கண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் வெங்கட் ரெட்டி( 60). 2011 வரை மூக்கண்டப்பள்ளி ஊராட்சித் தலைவராகயிருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மதியம் ஒசூரில் இருந்து மூக்கண்டப்பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மூக்கண்டப்பள்ளி லால் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலையில் சென்று கொண்டிருந்த
போது, அவ்வழியாக வந்த லாரி மோதியதில் நிகழ்விடத்திலே வெங்கட்ரெட்டி உயிரிழந்தார். சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.