தேன்கனிக்கோட்டையில் 25 விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேன்கனிக்கோட்டையில் சுமார் 25 இடங்களில் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை 25-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை ஏரியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. இதையொட்டி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தளி அருகே மதகொண்டப்பள்ளியில் 12 விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன.