பென்னாகரம் அருகே ஜெயம் தொழில்நுட்ப கல்லூரியின் சார்பில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு பென்னாகரம் வட்ட நுகர்வோர் அலுவலர் சம்பத்குமார் வரவேற்றார். ஜெயம் கல்லூரியின் முதல்வர் சுப்பராயன் தலைமை வகித்தார். பின்னர் மாவட்ட வழங்கல் மற்றும்நுகப்வோர் பாதுகாப்பு அலுவலர் லட்சுமி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பேசினர். நாட்டு நலப்பணித் திட்டஅலுவலர்கள் ஆனந்தன்,
சந்திரசேகர் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.