ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்வியியல் கல்லூரியில் நல்லாசிரியர் நா.சீனிவாசன் நினைவு சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் வரவேற்புரையாற்றினார். சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமை வகித்தார். அதியமான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன், கல்வியியல் கல்லூரி செயலர் அபிநயா கணபதிராமன், கல்வியியல் கல்லூரி முதல்வர் கீதாம்பிகை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தனியார் நர்சரி பிரைமரி பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி சங்கங்களின் பொதுச் செயலர் நந்தகுமார், வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி முனைவர் சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சொற்பொழிவாளர் ஜெயந்த ஸ்ரீபாலகிருஷ்ணன், "உன்னுள் இருக்கும் ஆசிரியரைக் கண்டறி' என்ற தலைப்பில் கருத்துகளை எடுத்துரைத்தார். இதில் ஆசிரியர்கள், கல்வியியல் கல்லூரி மாணவியர் கலந்துகொண்டனர். தமிழ்த் துறை பேராசிரியர் செ.சாந்தி நன்றி கூறினார்.