பி.எஸ்.வி. பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி அருகே உள்ள பி.எஸ்.வி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் துறையின் சார்பில் சர்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பி.எஸ்.வி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் துறையின் சார்பில் சர்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு பி.எஸ்.வி. கல்விக் குழுமங்களின் நிறுவனர் பி.செல்வம் தலைமை வகித்தார். இதில், கல்லூரியின் செயலர் எஸ்.விவேக், முதல்வர் பி.லாரன்ஸ், ராயல் என்பீல்டின் மேலாளர் ஏ.முகமத் முஜாஸம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், இயந்திரவியல் துறையின் தலைவர் கே.ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், இருசக்கர வாகனத்தின் பயன்பாடு மற்றும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை செயல் விளக்கமாக விளக்கப்பட்டன. கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com