கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊரக திறனாய்வு தேர்வை 3,185 மாணவ, மாணவியர் எழுதினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, மத்தூர், ஒசூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களில் 13 தேர்வு மையங்களில் ஊரக திறனாய்வு தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 3,702 மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3,185 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
இந்தத் தேர்வை 9 -ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் எழுதினர். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில், 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் மாதம்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகை மாணவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.