தொடர் விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு தமிழகம், கர்நாடகம், கேரளம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். இந்த நிலையில் பள்ளிகளுக்கு பருவ தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் அங்குள்ள முதலைப் பண்ணை, வண்ணமீன்கள் அருங்காட்சியகம் ஆகியவற்றை கண்டு ரசித்தனர்.