காங்கிரஸார் மனு அளிப்பு

ரஃபேல் போர் விமான ஊழல் குறித்து, கிருஷ்ணகிரி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ்  சார்பில் மனுஅளிக்கப்பட்டது.

ரஃபேல் போர் விமான ஊழல் குறித்து, கிருஷ்ணகிரி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ்  சார்பில் மனுஅளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ்  தலைவர் முரளிதரன் தலைமையில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:  பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, ரஃபேல்  போர் விமானம் வாங்கியதில்  ஊழலில் ஈடுபட்டது குறித்து இத்துடன் இணைத்துள்ளோம்.  இந்த மனுவை,  மாவட்ட ஆட்சியர் மூலம், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com