பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் போச்சம்பள்ளியில் நடைபெற்றது.

தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் போச்சம்பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் பக்தவச்சலம் தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் மாயவன், மாவட்டச் செயலாளர் அமர்நாத்,  மாவட்ட துணைத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் சந்திரசேகர் வரவேற்றார். மாநிலப் பொதுச்செயலாளர் கோவிந்தன், மாநில பொருளாளர் பாஸ்கரன், மாநிலச் செயலாளர் நந்தகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 
கூட்டத்தில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை, இனி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும். பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி (பி.ஜி) ஆசிரியர்களுக்கு வழங்க இனி ஒருபோதும் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் அனுமதிக்காது.
தவறும் பட்சத்தில் நீதி மன்றத்தை நாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com