காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பேகாரஅள்ளி ஊராட்சியில் 2016 -17 ஆம் ஆண்டுக்கான கிராம விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதில் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், ஊராட்சி செயலாளர் துரைவேல் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை நடத்தி வைத்தனர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.