கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான இருக்கைகள், மேஜைகளை கே.அசோக்குமார் எம்.பி. திங்கள்கிழமை வழங்கினார்.
கிருஷ்ணகிரி அரசு மகளில் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவியர் அமர்ந்து படிக்க மேஜைகள், இருக்கைகளுக்கு உதவ வேண்டும் என கே.அசோக்குமார் எம்.பி.யிடம் கல்லூரி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து, மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், 200 மேஜைகள், இருக்கைகளை கே.அசோக்குமார் எம்.பி., மாணவியரின் பயன்பாட்டுக்கு வழங்கினார். இந்த நிகழ்வுக்கு, கல்லூரியின் முதல்வர் சௌ.கீதா தலைமை வகித்தார். பேராசிரியர் சிவகாமி, அ.தி.மு.க. நகரச் செயலாளர் கேசவன், மாவட்ட மாணவரணி செயலாளர் தங்கமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.