மத்தூர் அருகே கார் விற்பனையாளர் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

மத்தூர் அருகே கார் விற்பனையாளர் கடத்தப்பட்ட வழக்கில், மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மத்தூர் அருகே கார் விற்பனையாளர் கடத்தப்பட்ட வழக்கில், மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த சந்தூர் அருகே உள்ள நல்லப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (23). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த அக். 24-ஆம் தேதி மர்ம நபர்கள் ஸ்ரீதரை, ரூ.6 லட்சம் பணம் கேட்டு கடத்திச் சென்றனர். இது தொடர்பாக மத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வேலம்பட்டியைச் சேர்ந்த போலி சாமியார் பெரியசாமி, அவரது நண்பர்கள் சின்னபையன், சக்திவேல், கோவிந்தராஜ், சரவணன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 சுவாமி சிலைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த வேலூர் மாவட்டம், சிவா (எ) பழனி (28), மத்தூர் அருகே வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் (42) ஆகிய 2 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கம், ஆயுதங்கள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com