சாமல்பட்டியை அடுத்த எட்டிப்பட்டி பிரிவு சாலை அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் பணத்தைத் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் சத்திய சாய்நகரைச் சேர்ந்தவர் முனுசாமி (59). தொழிலாளர் நல வாரிய ஓய்வுபெற்ற அலுவலர். இவர், ஊத்தங்கரைப் பகுதியில் நிலம் வாங்க முன்பணமாகக் கட்ட ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் எடுத்து வந்தபோது பிடிபட்டது தெரியவந்தது.
பறிமுதல் செய்த பணத்தை ஊத்தங்கரை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மூன்று தினங்களுக்குள் தகுந்த ஆவணங்களை வழங்கிப் பணத்தைப் பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.