ஊத்தங்கரை அருகே ரூ.1. 16 லட்சம் பறிமுதல்

சாமல்பட்டியை அடுத்த எட்டிப்பட்டி பிரிவு சாலை அருகே  உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட

சாமல்பட்டியை அடுத்த எட்டிப்பட்டி பிரிவு சாலை அருகே  உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் பணத்தைத் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் சத்திய சாய்நகரைச் சேர்ந்தவர் முனுசாமி (59). தொழிலாளர் நல வாரிய ஓய்வுபெற்ற அலுவலர். இவர், ஊத்தங்கரைப் பகுதியில் நிலம் வாங்க முன்பணமாகக் கட்ட ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் எடுத்து வந்தபோது பிடிபட்டது தெரியவந்தது.
பறிமுதல் செய்த பணத்தை ஊத்தங்கரை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மூன்று தினங்களுக்குள் தகுந்த ஆவணங்களை வழங்கிப் பணத்தைப் பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com