தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2-ஆவது நாளாக மகுடஞ்சாவடி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை கோரிக்கை விளக்கக் கூட்டத்தை நடத்தினர்.
மகுடஞ்சாவடியில் நடைபெற்ற கோரிக்கை விளக்கக் கூட்டத்துக்கு வட்டாரக் கிளை தலைவர் வட்டத் தலைவர் பி.மணி தலைமை வகித்தார். வட்டச் செயலர் ஜி.மோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரசார செயலர் எம்.முருகன், பொருளாளர் பி.சுமதி, கோட்ட செயலர் பி.பிரதீப்குமார், நிர்வாகிகள் ராஜலிங்கம், சதீஷ்பிரபு உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
பின்னர் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்த கோரிக்கைகள் குறித்து மகுடஞ்சாவடி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு கோரினர். இதில், சங்ககிரி வட்டத்தில் 11 பெண்கள் உள்பட 32 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஆட்டையாம்பட்டியில்...
இளம்பிள்ளை மாரியம்மன் கோயில் அருகே கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் போராட்டம் குறித்து பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.