வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலி பறிப்பு

மேச்சேரியில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலி பறித்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மேச்சேரியில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தாலி பறித்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மேச்சேரி அருகே உள்ள குக்கல்பட்டியைச் சேர்ந்தவர் நல்லதம்பி ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். திங்கள்கிழமை இரவு நல்லத்தம்பியும், அவரது மனைவி அமுதவள்ளியும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனராம். நள்ளிரவில் மர்ம நபர்கள் நல்லதம்பியின் வீட்டில் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த அமுதவள்ளியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கத் தாலியை பறித்துக் கொண்டு ஓடினராம். இதை அறிந்த அமுதவள்ளி சத்தமிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால், மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். தகவலறிந்த மேச்சேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதேபோல், அழகாகவுண்டனூரில் இரண்டு வீடுகளின் கதவை உடைக்க முயன்ற மர்ம நபர்களை கிராம மக்கள் விரட்டியுள்ளனர். 
இச்சம்பவங்கள் குறித்து மேச்சேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் கதவை உடைக்க முயன்றவர்கள் இந்தியில் பேசியபடி ஓடியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com