கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் அன்பு, பகிர்வு மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் பற்றிய கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.
நிகழ்ச்சியில், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஜான் ஜோசப் மற்றும் முன்னாள் ஆசிரியர் ஆர்.மரியசெல்வம் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவர் சஞ்சய் மற்றும் திருப்பதியில் நடைபெற்ற 16-ஆவது தேசிய அளவிலான ஜூனியர் தடகள நீளம் தாண்டுதல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் அபிஷேக் ஆகியோருக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. விழாவில் உடற்கல்வி ஆசிரியர் ஐ.ராபர்ட் பங்கேற்றார். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆங்கில ஆசிரியர்கள் செய்திருந்தனர்.