"செல்வி மெஸ்' கிளை திறப்பு
சேலத்தில் செல்வி மெஸ்-இன் புதிய கிளை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
சேலம்-பெங்களூரு புறவழிச்சாலையில் எஸ்.கே.எஸ். கார்ஸ் ஷோரூம் எதிர்புறம் மாமாங்கம் பேருந்து நிறுத்தம் அருகே செல்வி மெஸ் அசைவம், சேலம் கபே சைவம் என்ற பெயரில் புதிய கிளை தொடங்கப்பட்டது. செல்வி மெஸ்-இல் அனைத்து விதமான அசைவ உணவு வகைகளும், சேலம் கபே-இல் உயர்தர அனைத்து சைவ உணவு வகைகளும் கிடைக்கும். மேலும், கேட்டரிங் வசதியும், பார்க்கிங் வசதியும் உள்ளது.
விழாவில் சேலம் மாவட்ட ஹோட்டல் சங்கத் தலைவர் எம்.எஸ்.சண்முகம் வரவேற்றார். செல்வி மெஸ் ஹோட்டல் திறப்பு விழாவில் தமிழ்நாடு ஹோட்டல் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு, செயலர் சீனிவாசன், டாக்டர் மோகன் ஆகியோரும், சேலம் கபே ஹோட்டல் திறப்பு விழாவில் ஆர்.கே.மருத்துவமனை ஆர்.கே.ராஜு, நில உரிமையாளர் சி.என்.அண்ணாதுரை (எ) மோகன் ஆகியோரும் பங்கேற்றனர். விழாவில் செல்வி மெஸ் குரூப்ஸ் நிர்வாக இயக்குநர் பி.எல்.பழனிசாமி ஏற்புரை நிகழ்த்தினார். செல்வி மெஸ் நிர்வாக பங்குதாரர் ஜி.சுப்பிரமணி நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை செல்வி மெஸ் குரூப்ஸ் மேலாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.