நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மகுடஞ்சாவடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் பொங்கலூர் என்.பழனிசாமி, எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து விளக்கிக் கூறினர். இதில் மாவட்ட துணைச் செயலர்கள் சுந்தரம், சம்பத், கீதா, மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், ஒன்றியச் செயலர் (பொறுப்பாளர்கள்) சங்ககிரி எஸ்.பி.நிர்மலா, மகுடஞ்சாவடி பச்சமுத்து, எடப்பாடி பூவாகவுண்டர், கொங்கணாபுரம் பரமசிவம், தாரமங்கலம் ரவிக்குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் கமலக்கண்ணன், மாவட்ட வழக்குரைஞர் துணை அமைப்பாளர் வி.என்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.