கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.21.64 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருள்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அனுப்பி வைத்தார்.
சேலம் திருவாக்கவுண்டனூர் புறவழிச் சாலை அருகே சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதற்கட்டமாக சுமார் 2 லாரிகளில் பால், பால் பவுடர், ரொட்டி துண்டுகள், குடிநீர், பிஸ்கெட், நாப்கின், தீப்பெட்டி, பருப்பு, அரிசி, சர்க்கரை, சேமியா, ரவை, பாய், லுங்கி, வேட்டி, போர்வைகள் என சுமார் ரூ.21.64 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருள்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அனுப்பி வைத்தார்.