காவலர் தற்கொலை முயற்சி

தலைவாசல் காவல் நிலையத்தில் காவலர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

தலைவாசல் காவல் நிலையத்தில் காவலர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் கமலேஷ் மகன் வெள்ளையன்(44), சேலத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தலைவாசல் காவல் நிலையத்தில் கடந்த 2016 முதல் பணிபுரிந்து வரும் இவர், திங்கள்கிழமை மதியம் பணியில் இருந்த போது மதுவில் விஷம் கலந்து குடித்ததாக தெரிகிறது.
இதனை அங்கிருந்த காவலர்கள் காவல் ஆய்வாளர் குமரவேல்பாண்டியனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு வெள்ளையன் ஒத்துழைக்க மறுத்துள்ளார். மேலும் தன்னைப் பற்றியும், குடும்பத்தை பற்றியும் எந்த தகவலும் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனையடுத்து காவல் ஆய்வாளர் குமரவேல்பாண்டியன் மற்றும் அரசு மருத்துவர் வெள்ளையனை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com