திருட்டு வழக்கில் கைதான இளம்பெண்ணுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் பெரியகொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் மைதிலி (32). இவர் மீது ஏற்கெனவே 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இவர் 2014 ஆம் ஆண்டு கன்னங்குறிச்சி பகுதியில் திலகவதி என்பவரின் வீட்டில் 35 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணம் திருடியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு விசாரணை சேலம் எண் 4 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கைதான மைதிலிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.