கல்குவாரி குட்டையில் டிராக்டர் கவிழ்ந்ததில் ஒருவர் சாவு

மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே கல்வாரி குட்டையில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.


மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே கல்வாரி குட்டையில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மேச்சேரி அருகே உள்ள காளிகவுண்டனூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை (35). இவர் அப்பகுதியில் கைவிடப்பட்ட கல்குவாரி குட்டையில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் டிராக்டரில் நிரப்பி விற்பனை செய்து வந்தார். இந்தக் குவாரியை தாரமங்கலத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சனிக்கிழமை டிராக்டரில் தண்ணீர் நிரப்புவதற்காக அண்ணாமலை சென்றுள்ளார்.
அப்போது நிலை தடுமாறிய டிராக்டர் சுமார் 30 அடி ஆழமுள்ள கல்குவாரி குட்டையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அண்ணாமலை குட்டையில் மூழ்கி உயிரிழந்தார். இந்த ச் சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அண்ணாமலைக்கு சத்யா(27) என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com