தலைவாசல் அருகே லாரியைக் கடத்திச் சென்று 6 டயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள வேப்பம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (50). இவர் தனக்கு சொந்தமான டிப்பர் லாரியை ஆத்தூரை அடுத்துள்ள துலுக்கனூர் பகுதியில் நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை சென்று பார்த்தபோது அவரது லாரியை காணவில்லை. இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் ஊரக காவல் ஆய்வாளர் ஆர்.சரவணன் விசாரித்து வந்தார்.
இந்தநிலையில் வெள்ளிக்கிழமை மாலை செல்லியம்பாளையம் அருகே டிப்பர் லாரி ஒன்று அனைத்து டயர்களும் கழற்றப்பட்ட நிலையில் நிற்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.