ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் ஆறகளூரில் கல்வெட்டு படிக்க ஞாயிற்றுக்கிழமை பயிற்சி மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வடசென்னிமலையில் இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவ, மாணவியர் தலைவாசலை அடுத்துள்ள ஆறகளூரில் உள்ள புத்தர் தியான மையத்தில் கல்வெட்டு படிக்க பயிற்சி மேற்கொண்டனர். சேலம் வரலாற்று மைய ஆறகளூர் பொன்.வெங்கடேசன் அவர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி ஒரு வார காலத்துக்கு நடைபெறும் என தெரிவித்தனர்.