மேட்டூரில் உள்ள கணேச ஆஞ்சநேய வரதராஜ பெருமாள் கோயிலில் மூன்று உண்டியல்கள் திடீரென வைக்கப்பட்டதைக் கண்டித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூரில் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான கணேச ஆஞ்சநேய வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தும் வகையில் பெரிய உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நுழைவுவாயில் அருகே புதிதாக சனிக்கிழமை புதிய உண்டியல் வைக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் எதிப்புத் தெரிவித்து தர்னாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த மேட்டூர் போலீஸார், வருவாய்த் துறையினர் மற்றும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பக்தர்களை சமாதானப்படுத்தினர். மேலும், இந்து அறநிலையத் துறையில் சார்பில் புரட்டாசி சனிக்கிழமைகளில் குடம் உண்டியல் வைக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கான அறிக்கையை பக்தர்களிடம் காண்பித்தனர். இதையடுத்து பக்தர்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதில் இருந்த ரூ2,095 கோயில் கணக்கில் சேர்க்கப்பட்டது.