சேலத்தில் இன்று அதிமுக கண்டன பொதுக்கூட்டம்: முதல்வர் பங்கேற்பு

சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.
அதிமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் திமுக, காங்கிரஸ் கூட்டணியைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (செப்.25) கண்டன பொதுக் கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. 
இதன்படி, சேலம் கோட்டை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். சேலம் மாநகர் மற்றும் புறநகர் அதிமுக சார்பில் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 
முன்னதாக சுவாமி தரிசனம் செய்வதற்காக திங்கள்கிழமை இரவு திருப்பதி கோயிலுக்கு முதல்வர் சென்றுள்ளார். பின்னர் செவ்வாய்க்கிழமை காலை  அங்கிருந்து கார் மூலம் சேலம் வருகிறார்.
சேலம் மாநகருக்கு வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் பேசுகிறார்.
கூட்டத்தை முடித்துவிட்டு கார் மூலம் கோவை செல்லும் முதல்வர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் வருகையை முன்னிட்டு சேலம் நகரில் பலத்த போலீஸ் பாகாப்புப் போடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com