பெரியேரி எஸ்.ஆர்.எம். முத்தமிழ் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை பரிசு வழங்கி பாராட்டினர்.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள எஸ்.ஆர்.எம். முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் முறையே 566, 564, 561 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை எஸ்.ஆர்.எம். முத்தமிழ் குழுமத் தலைவர் பெரியண்ணன், செயலர் கந்தசாமி, பொருளாளர் செந்தில்குமார், கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் பரிசு வழங்கி பாராட்டினர்.