தம்மம்பட்டியில் 25-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு திருவிழாவில் கடந்த ஆண்டு முதல் பரிசாக மாருதி கார் கொடுக்கப்பட்டதை அடுத்து மிகவும் பிரசித்தி பெற்றது. வரும் 25-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர். நிகழ் வருடமும் அதிகமாக பரிசுகள் கொடுக்கப்படவுள்ளதால் 1,000 மேற்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.