தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவராக தி. சத்யமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்கத்தின் மாவட்ட மைய நிர்வாகிகள் தேர்தல் அண்மையில் நடைபெற்றது.
இதில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநரும், அலுவலக மேலாளருமான வீ.ப. கலைச்செல்வி தலைமையில் தேர்தல் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவராக தி. சத்யமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவராக வி. ரூபா, மாவட்டச் செயலாளராக ஆர். முருகன், மாவட்டப் பொருளாளராக ப. சரவணன், மத்திய செயற்குழு உறுப்பினராக இரா. ஜெகதீசன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் 2019-2021 இரண்டு ஆண்டுகளுக்கு நிர்வாகிகளாக பதவி வகிப்பார்கள் எனத் தேர்தல் அலுவலர் வீ.ப. கலைச்செல்வி தெரிவித்தார்.