ஆத்தூரை அடுத்துள்ள வட சென்னிமலையைச் சேர்ந்த விவசாயி மகன் வருண்குமார் (15). இவர், தேசிய வாலிபால் போட்டிக்கு தமிழக அணி தேர்வில் தேர்வு பெற்றிருக்கிறார்.
இவர், ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு சப்-ஜீனியர் வாலிபால் அணி தேர்வு நடைபெற்றது. அதில் தமிழக அணி தேர்வில் வருண்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஒடிஸாவில் வரும் 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடுகிறார்.
இவருக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.