காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு கையெழுத்து இயக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு  அகில பாரதிய

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு  அகில பாரதிய  வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாணவர் அமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம்  நடைபெற்றது.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின்  மாநில செயலாளர் எல்.கார்த்திகேயன் தலைமையில் கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராணுவ வீரர்களின்  மரணத்துக்கு  இந்திய ராணுவம் உடனடியாக தக்க பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் முழுமையாக ஆதரவையும் பங்களிப்பையும் வழங்க தயாராக உள்ளனர். மேலும், இச்சம்பவத்துக்கு எதிராக அனைத்துக் கல்லூரிகளும் வாயிற் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com