காணும் பொங்கலையொட்டி, வாழப்பாடி பகுதி கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடைபெற்றன.
வாழப்பாடி அருகேயுள்ள புதுப்பாளையம், சிங்கிபுரம், சோமம்பட்டி, விலாரிபாளையம், மன்னார்பாளையம், பொன்னாரம்பட்டி, சேசன்சாவடி, வெள்ளாளகுண்டம் உள்ளிட்ட கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடைபெற்றன.
இதையொட்டி, கோயில்களில் சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. இதுதவிர, கிராமங்களில் சிறுவர்-சிறுமியருக்கான விளையாட்டுப்போட்டிகள், பானை உடைத்தல், வலுக்குமரம் ஏறுதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமிய விளையாட்டுகளும் நடைபெற்றன. மேலும், புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணைப்பகுதிக்கு ஏராளமானோர் சென்று பார்வையிட்டனர்.