சேலையில் தீப்பிடித்து பெண் சாவு

கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை பெருமாள்மலைப் பகுதியில் சமையல் செய்தபோது சேலையில் தீப் பிடித்ததில் பெண் இறந்துள்ளார்.

கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை பெருமாள்மலைப் பகுதியில் சமையல் செய்தபோது சேலையில் தீப் பிடித்ததில் பெண் இறந்துள்ளார்.
கொடைக்கானல் அருகே பெருமாள்மலைப் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (27). இவர்களுக்கு சுமார் 7-வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந் நிலையில் மல்லிகா வீட்டில் உள்ள அடுப்பில் சமையல் செய்தபோது, வலிப்பு ஏற்பட்டு சேலையில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து புகை வெளியே வந்ததில் அருகில் இருந்தவர்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது உடல் கருகி மல்லிகா இறந்து கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து வீட்டினுள் இறந்து கிடந்த மல்லிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு விசாரனை நடத்தி வருகின்றனர்.  இச் சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ.விசாரணையும் நடைபெறும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com