பழனி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.16) நீண்ட நாள் கோரிக்கைகளுக்கான தீர்வு முகாம் நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நீண்ட நாள்களாக தீர்வு காணப்படாமல் நிலுவையிலுள்ள மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தீர்வு முகாம் நடைபெற உள்ளது. எனவே பழனி கோட்டத்தில் உள்ள பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் வேடசந்தூர் வட்டத்தினைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்து மனுக்கள் அளித்து நீண்ட நாள்களாக தீர்வு காணப்படாமல் நிலுவையிலுள்ள பட்டா மாறுதல், வீட்டுமனைப்பட்டா, வாரிசுச் சான்று, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவைச் சான்று, நிலம் எடுப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து நேரடியாக மனுக்கள் அளித்து தீர்வு காணலாம்.
மேலும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, தங்களது நீண்டநாள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என சார்-ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.