பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

ஒட்டன்சத்திரத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒட்டன்சத்திரத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தும்மிச்சம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் (37).  இவர், தங்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக அப்பள்ளி மாணவிகள், பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து கடந்த 12 ஆம் தேதி ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி முதல்வர் சீலன் ஸ்டீபன் புகார் செய்தார். 
அதன்பேரில், ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com