தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம், திண்டுக்கல்லில் உள்ள சாலை ஆய்வாளர் சங்கக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஆ.அம்சராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: நெடுஞ்சாலைத்துறை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்காமல், அரசே ஏற்று நடத்த வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, நிலுவையிலுள்ள தொகையினை வழங்க வேண்டும். ஜாக்டோ- ஜியோ சார்பில் அக்.10ஆம் தேதி நடைபெறவுள்ள தற்செயல் விடுப்பு போராட்டத்தில் சாலைப் பணியாளர்கள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.