கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிகளில் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் காட்டுத்தீ ஏற்பட்டது.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப் பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள புற்கள், மரங்களில் தீப்பிடித்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் பில்டிங், சொசைட்டி, எம்.எம்.தெரு ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காட்டுத் தீ ஏற்பட்டது. இந்நிலையில், 3ஆவது நாளாக சனிக்கிழமையும் அப்பகுதிகளில் தீப்பிடித்து எரிந்தது.
அதைத்தொடர்ந்து, சம்பவ இடங்களுக்கு கொடைக்கானல் தீயணைப்புத் துறையினர் சென்று, சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.