வேடசந்தூர் அருகே வியாபாரி வெட்டிக் கொலை

வேடசந்தூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு, வியாபாரியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்


வேடசந்தூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு, வியாபாரியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்துள்ள கெண்டையகவுண்டனூரைச் சேர்ந்தவர் சவடமுத்து (எ) மொரராஜ் (45). இவருக்கு பூங்கொடி, லட்சுமி என 2 மனைவிகள் உள்ளனர்.  சசிகலா, சர்மிளா, வடிவேல் என 3 குழந்தைகள் உள்ளனர்.
சவடமுத்து, மினி சரக்கு வாகனங்களை வைத்து, காய்கறிகள், பழங்கள் போன்ற விளை பொருள்களை ஒட்டன்சத்திரம் சந்தைக்கு ஏற்றிச்செல்லும் தொழில் செய்து வந்தார். 
 இவர், பெரும்பாலான நேரங்களில் வீட்டுக்கு செல்லாமல், தனது வாகனங்களை நிறுத்தும் தாடிக்கொம்பு இடையக்கோட்டை பிரதான சாலையிலேயே தூங்கி விடுவாராம். அதேபோல், வெள்ளிக்கிழமை இரவும் வாகனம் நிறுத்தம் பகுதியில் கட்டிலில் தூங்கியுள்ளார். அப்போது அங்கு சென்ற மர்ம நபர்கள், தூங்கி கொண்டிருந்த சவடமுத்துவை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இந்நிலையில், சனிக்கிழமை காலை அந்த வழியாக சென்றவர்கள், சவடமுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து, வேடசந்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 
 அதன்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார், அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com