திண்டுக்கல்லில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் அருகே டாஸ்மாக் பணியாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் அருகே டாஸ்மாக் பணியாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடியில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் சிஐடியு மாவட்ட தலைவர் பி.ராமு தலைமை வகித்தார். இதில், டாஸ்மாக் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியும், அச்சுறுத்தல் ஏற்டுத்தியும், மதுபானக் கடைகளில் திருடியும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். 
ஊழியர்களின் உயிருக்கும், உடைமைக்கும், பணிக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். கடையில் ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை பழிவாங்கும் போக்கினை கைவிட வேண்டும். டாஸ்மாக் கடைகளில் மதுபான பெட்டிகளை ஏற்றி, இறக்கும் தனியார் ஒப்பந்தக்காரர் ஊழியர்களை மிரட்டி அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் மாநில குழு உறுப்பினர் மா.கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com