நிலக்கோட்டை சட்டப் பேரவை இடைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் உள்பட 2 பேர் மனுத் தாக்கல்

நிலக்கோட்டை சட்டப் பேரவை இடைத் தேர்தலில்  அதிமுக சார்பில் போட்டியிடும் தேன்மொழி தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும்

நிலக்கோட்டை சட்டப் பேரவை இடைத் தேர்தலில்  அதிமுக சார்பில் போட்டியிடும் தேன்மொழி தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீனத் பானுவிடம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். அப்போது ஜெயலலிதா பேரவையின் மாநில இணைச் செயலர் என்.கண்ணன், ஒன்றிய செயலர் யாகப்பன் ஆகியோர் உடனிருந்தனர். 
சுயேட்சை வேட்பாளர் மனுத் தாக்கல்: அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை அடுத்துள்ள நூத்துலாபுரம் பகுதியைச் சேர்ந்த அ.சங்கிலி பாண்டியன்(38) சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். அவரது சொத்து மதிப்பு ரூ.45 லட்சம் என வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


அதிமுக வேட்பாளர் தேனிமொழி சொத்து விவரம்: தேன்மொழி பெயரில் ரூ.82 லட்சம் மதிப்பில் அசையும் சொத்து, ரூ.4.84 கோடி மதிப்பிலான அசையா சொத்து இருப்பதாகவும், அவரது கணவர் சேகர் பெயரில் அசையும் சொத்து ரூ.8.27 லட்சம், அசையா சொத்து ரூ.3.14 கோடி மதிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெயரில் ரூ.24.15லட்சம், கணவர் சேகர் பெயரில் ரூ.23.74 லட்சம் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com