பகத்சிங் நினைவு தினம்

திண்டுக்கல் மாவட்ட காமராஜர் சிவாஜி தேசியப் பேரவை சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் 88-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 


திண்டுக்கல் மாவட்ட காமராஜர் சிவாஜி தேசியப் பேரவை சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் 88-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 
திண்டுக்கல் காமராஜர் சிலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காமராஜர் சிவாஜி பேரவையின் மாநகரத் தலைவர் க.ஆனந்தன் தலைமை வகித்தார். இளைஞர் பிரிவுத் தலைவர் ஆ.சிவக்குமார் முன்னிலை வகித்தார். அரசியல் ஆலோசகர் கே.ராதாகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினார். 
முன்னதாக, முப்பெரும் தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சு.வைரவேல், சிவாஜி 
பத்மநாபன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com