கமுதி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ், பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பான முறையில் கையாளுதல் தொடர்பான பயிற்சி மற்றும் உலக மண்வள தினம் புதன்கிழமை நடைபெற்றது.
பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் உழவர் நல்வாழ்வு இயக்கம், உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுசீலா தலைமையில் நடைபெற்ற பயிற்சியில், வேளாண்மை இணை இயக்குநர் (ம.திட்டம் ) சொர்ணமாணிக்கம், விதைச் சான்று உதவி இயக்குநர் கண்ணையன், வேளாண்மை துணை இயக்குநர் (பொறுப்பு) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சேக் அப்துல்லா, கல்லூரியின் தாளாளர் அகமது யாசின், ராமநாதபுரம் மாவட்ட வேளாண் அறிவியல் மைய உதவி பேராசிரியர்கள் பாலாஜி, பாலசுப்ரமணியன், ஆரோக்யமேரி, கால்நடை உதவி மருத்துவர் சதீஸ், வேளாண் அலுவலர் அம்பேத்குமார் மற்றும் கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மீ. பாக்கியராஜ் ஆகியோர் பேசினர்.
விழாவில், விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள், நிலக்கடலை மினி கிட் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்பட்டன. உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல் பற்றி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இதில், அச்சங்குளம் மற்றும் பேரையூர் கிராமங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில், மண் மாதிரிகளை சேகரிக்கும் விதம் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.