சாயல்குடி அருகே வேன் மோதி மீனவக் கூலித்தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
உறைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் அம்புரோஸ் (55 ). மீனவக் கூலித் தொழிலாளி. இவர் சாயல்குடி அருகே உறைக்கிணறு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று சாலையை கடக்கும் போது அவ்வழியாக வேகமாக வந்த மினி வேன் மோதியது. இதில் அம்புரோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து சாயல்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் மினிவேன் ஓட்டுநர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.