விளங்குளத்தூரில் புதிய நிழற்கூடம் அமைக்கக் கோரிக்கை

முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூரில் இடிந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தை அகற்றிவிட்டு,

முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூரில் இடிந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தை அகற்றிவிட்டு, புதிய நிழற்கூடம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 விளங்குளத்தூர், வெங்கலகுறிச்சி கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  
 இக்கிராமத்தினர் பல்வேறு பணிகள் காரணமாக தினமும் முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி பகுதிகளுக்கு பேருந்தில் சென்று வருகின்றனர். 
 இந்நிலையில், விளங்குளத்தூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்து வலுவிழந்துள்ளது. இதனால், நிழற்கூடத்தை பயணிகள் தவிர்த்து சாலையோரத்திலும், மரத்தடியிலும் பேருந்துக்காக காத்திருக்கின்றனர்.
 எனவே, கிராம மக்களின் நலன் கருதி விளங்குளத்தூர் பேருந்து நிறுத்த நிழற்கூடத்தை அகற்றிவிட்டு புதிய நிழற்கூடம் அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com