திருவாடானை அருகே உள்ள ஆர்.எஸ்.மங்கலத்தில் வயதான காலத்தில் தாயை கவனிக்காத மகனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அமீர் மைதீன் மனைவி சீனி செய்யது (74). இவரது ஒரே மகன் அசரப் அலி (50). இந்நிலையில், சீனி செய்யதுவுக்கு வயதான காலத்தில் அவரது மகன் எவ்வித உதவிகளும் செய்யாததால் மிகவும் வறுமையில் வாடி வந்துள்ளார்.
இந்நிலையில், தன்னை பராமரிக்காததால், சீனி செய்யது ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து அசரப் அலியை கைது செய்தனர்.