திருவாடானை அருகே தளிர்மருங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள உலக ஈஸ்வரர் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜையும், ஆலயத்தின் திருப்பணி குறித்து கலந்தாய்வுக் கூட்டமும் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இக் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் மழை வேண்டியும், உலகம் நன்மை பெற வேண்டியும் 1008 திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. மேலும், பழமையான இக்கோயில் தற்போது சிதலமடைந்து வருவதால், இக் கோயிலை புனரமைக்க உலகளாவிய ஆன்மிக சங்கம் சிவ. நடராஜன் சுவாமிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதில், தளிர்மருங்கூர் மற்றும் சுற்றுவட்டாரப் பொது மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.