ராமேசுவரத்தில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பாலித்தீன் பொருள்களை தவிர்க்க வேண்டும் என, இந்தியக் கடற்படையினர் மீனவர்களிடையே வியாழக்கிழமை துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இந்தியக் கடற்படையினர் பாலித்தீன் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கடலில் வீசும் பாலித்தீன் பைகளால் மீன்கள் பாதிப்படைவது குறித்தும், சேராங்கோட்டை மீனவக் கிராமத்தில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கினர். நிகழ்ச்சியில், கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் அனில்குமார்தாஸ் தலைமையிலான கடற்படையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில், கடற்படை அதிகாரி எல்.கே. சிங் மற்றும் கடற்படை வீரர்கள் கலந்துகொண்டனர்.