ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜூ (25). இவர் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் சட்ட விரோதமாக 50 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக கேணிக்கரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.