ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே டி.கரிசல்குளத்தில் விவசாயிகளுக்கு நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கடலாடி வேளாண்மை உதவி இயக்குநர் (பொ)முருகேஸ்வரி தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு நெல் ரகத்தினை தேர்வு செய்வது, விதை நேர்த்தி செய்தல், இயந்திரங்களைக் கொண்டு வரிசை விதைப்பு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நெல் ரகத்தினை தேர்வு செய்வது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் (ஓய்வு)மணவாளன் விளக்கம் அளித்தார்.
இதில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மாரீஸ்வரன், அரவிந்த், வட்டார தொழில்நுட்ப மேலாளர் அ.ரெங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.